மேலும் 26 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 177 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியவர்கள் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.