உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 45 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். 17 இலட்சத்து 8 ஆயிரம் பேர் அளவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது. அங்கு 14 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2ம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.