மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சீனாவில் கடந்த ஒருமாதமாக புதிய உயிரிழப்பு எதுவும் பாதிவாகவில்லை. சீனாவில் தற்போது பெரும்பாலான இடங்களில் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதும், வடகிழக்கு மாகாணமான ஜிலினில் அதிகபடியான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியதாக அறியப்படும் வுஹான் நகரில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, வுஹான் நகரில் உள்ள சகலரையும் பரிசோதனைக்கு உட்படுத்த சீனா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.