கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை உலகளவில் உயிரிழக்க கூடுமென யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வறுமையில் உள்ள நாடுகள் மற்றும் சுகாதார சேவைகளில் பின்தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகளே குறித்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் உணவு நேரங்களை இழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.