பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இந்திய மத்திய அரசு நிதி திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. 264 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான குறித்த நிதி திட்டத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி திட்டத்தின் ஊடாக விவசாயிகள் மற்றும் சிறிய வர்த்தக செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி அறிவித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. 1.3 பில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள இந்தியாவில், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 415 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.