Ayush Scholarship புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பான விபரங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2020 – 2021ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகள் சார்ந்த கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். முழுமையான கல்விக்கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் வரையிலான மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு உள்ளிட்டவை புலமைபரிசில் மூலம் கிடைக்கப்பெறும். அத்துடன் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு மற்றும் வருடாந்த ஒதுக்கீடு ஆகியவையும் இந்த புலமைப்பரிசிலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கென விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சில் சமர்ப்பிக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை றறற.அழாந.பழஎ.டம என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். விரிவான தகவல்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் 0112421605 அல்லது 0112422788 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.