இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 2 ஆயிரத்து 212 பேர் நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்க சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பகுதியளவில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அந்நாட்டில் ரயில் சேவைகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 30 ரயில் சேவைகள் நாளாந்தம் இடம்பெறும் வகையில், ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது. தலைநகர் புதுடில்லியில் இருந்து மும்பை, பெங்களுர், சென்னை ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் நாளை முதல் இடம்பெறவுள்ளன. இதேவேளை, பயணிகள் ரயில் போக்குவரத்தை படிப்படியாக ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.