உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாலமுனைப் பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இன்று மாலை பாரிய தேடுதல் வேட்டைகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த காணியில் சஹ்ரானின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் தேடுதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினருடன் விசேட அதிரடிப்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.