ஊரடங்கு சட்டத்தை மீறிய 48 ஆயிரத்து 725 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 ஆயிரத்து 654 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று காலை 6.00 மணிமுதல் இன்று காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 206 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் நடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கு சட்டத்தை மதித்து செயற்படுமாறும், இன்றைய தினம் வெசாக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதி என்பதால் வெசாக் நிகழ்வுகளை தகுந்த ஆலாசனைக்கு அமைய முன்னெடுக்குமாறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.