கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள 200க்கும் அதிகமானோரை நாட்டுக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கழிமை இலங்கைக் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினமும் டுபாயில் இருந்து 197 இலங்கையளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.