சுகாதார அதிகாரிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் விரைவில் வெளியிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், சுகாதார வழிகாட்டுதலுக்கமைய செயற்படக்கூடிய சலூன்கள், அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில், நேற்றைய தினம் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்நிலையில் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளுக்கமைய தேவையான மாற்றங்களைச் செய்ததன் பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.