தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 73 பேர் இன்றைய தினம் வீடு திரும்பவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியிருந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய இதுவரை 4 ஆயிரத்து 819 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறிவுள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் விமான படையினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்படடிருந்த முதியவர்கள் இருவர் உயிரிழந்தனர். எனினும் அவர்கள் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கவில்லையெனவும் சாதாரண நோய் தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.