மண், மணல் போக்குவரத்துக்கென புதிய அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 11 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் பூகோள ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சுகாதார பிரிவினர் வழங்கிய ஆலோசனைக்கமைய சமூக விலகலை கடைப்பிடித்து அனுமதி பத்திரம் விநியோகிக்கவுள்ளது. சேவை பெறுநர்கள் அலுவலகங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் உரிய வழிமுறைகள் பின்பற்றபடுமென பூகோள ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.