இலங்கையில் தற்போது கொரோனா நோயாளிகளின் தொகை 674ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 151 பேர் பூரண சுகமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 504 பேர் வைத்தியசாலைகளில்சிகிச்சை பெற்று வருவதுடன் 145 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளனர். கொரோனா கொத்தாணி பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.