இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் 297 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 247 பேர் தற்போது வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் 9 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.
வெளிசர கடற்படை முகாமின் வீரர்க்ள சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில் குறித்த முகாமில் பணியாற்றும் சகலரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த முகாமில் உள்ள படைவீரர்கள் கடந்த பல தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணும் செயற்பாட்டில் முழுமையாக ஈடுப்பட்டனர். சுதுவெல்ல பகுதியில் இளஞர்கள் சிலரை கண்டு பிடிக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர். மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்ட வீரர்கலே தற்போது இடர்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
குறித்த முகாமில் சேவை செய்து விடுமுறையில் தனது வீட்டுக்கு சென்ற இரக்குவானை ஹொரமுல்ல பகுதியை சேர்ந்த படை வீர்ர் ஒருவர் வைத்திய பரிசோதனைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அவரின் குடும்ப உறுப்;பினர்கள் உள்ளிட்ட 37 பேர் வீட்டிற்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதா பரிசோதகர் நிமல் விஜய சிறி தெரிவித்தார்.
வெளிசர கடற்படை முகாமில் இருந்து விடுமறையில் வீட்டுக்கு சென்ற படைவீரர்கள் ஐவர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு சென்றதாக தெரிய வந்ததை அடுத்து பஸ் தரிப்பிடம் கிருமி தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது.
வாழதோட்டம் பண்டாரநாயக்க பகுதியில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே போன்று அப்பகுதியில் தொடர்ந்தும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து 160 பேர் பிசீஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள சுப்பர் மார்கெட் ஊழியர்கள் 30 பேரும் உள்ளடங்குகின்றனர். பண்டாரநாய்க்க மாவத்தை, வாழைத்தோட்டம் மற்றும் கொட்டாஞசேனை ஆகிய பொலஸ் பிரிவற்குட்பட்ட பகுதிகளில் 150 பேர வரை பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 88 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19வைஸ் பரவி வரும் நிலையில் சிகிச்சை நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.