பயணிகள் விமான சேவை இடைநிறுத்தல் காலத்தை மேலும் நீடிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. மே மாதம் 15 ம் திகதி வரை விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்டகை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய விமான சேவைகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கவனத்திற் கொள்ளும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைதெரிவித்துள்ளது. தற்போது இடம்பெறும் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன் தேவையெற்படும் பட்சத்தில் சிறப்பு விமான சேவைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை மேலும் தெரிவித்துள்ளது.