பேலியகொடை மத்திய மீன் சந்தையின் மொத்த சில்லறை வியாபார நடவடிக்கைகள் மாத்திரம் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவு மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நிபந்தனைகள் பலவற்றை விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய அனைத்து மீன் விற்பனை வியாபாரிகளும் சுகாதார பிரிவினர் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமென பேலியகொடை மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயஸ்ரீ விக்கரமராச்சி தெரிவித்துள்ளார். மொத்த சில்லறை வியாபாரத்தில் ஈடுப்படும் மீன் வியாபாரிகள் மாத்திரமே மத்திய நிலையத்திற்கு வருகை தரவேண்டும். அவ்வாறு வருகை தருபவர்கள் தமது பாதுகாப்பு குறித்தும் பொது மக்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுளார்.
இதேவேளை, பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட் 529 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் எவரும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படவில்லையென இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே மீன் சந்நையை மொத்த சில்லறை வியாபாரத்திற்கு திறப்பதற்கென தீர்மானிக்கப்பட்டது.