இந்தியாவில் மும்பை நகரில் இருந்து 166 இலங்கை மாணவர்கள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமானத்திற்கு சொந்தமான யு.எல்.143 விமானம் இன்று காலை 9.30 அளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தெற்காசிய நாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்கென அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வருகைதரவுள்ள 166 இலங்கை மாணவர்களும் பிற்பகல் 2.55 மணியளவில் நாட்டை வந்தடைவார்கள் என விமானநிலைய உபதலைவர் ரஜூ சூரியராச்சி தெரிவித்துள்ளார். அவ்வாறு வருகை தரும் மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.