நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களை கோரியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுலில் உள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட , அப்பாறை மாவட்டத்தின் அக்கறைபற்று ஆகிய இடங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும். ஏனைய மாவட்டங்களில் நேற்றிரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிமணி வரையில் அமுலில் இருக்கும்.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியேறுவதும் உள்நுளைவதும் முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் குறித்து இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஆலோசணைகள் பின்பற்றப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது