நேபாளத்தில் இருந்து மேலும் 93 மாணவர்கள் இன்றைய தினம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.எ. சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார். அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் நிர்கதியாகி இருந்த 101 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டுபாயில் இருந்த 2 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது