கொவிட் 19 வைரசுக்கு மத்தியில் கலாச்சார துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் கலாசார அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று இணையத்தளம் ஊடாக இடம்பெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் இதில் இணைந்துகொண்டார்.
கொவிட் 19 வைரசினால் கலாசார துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வலய மட்டத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. கொவிட் 19 தொற்று காரணமாக கலாசார துறைக்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டார். 2018 ம் ஆண்டு இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாக பெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலா துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார். கலாசார ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகள் படைப்புகள் ரீதியான தொழில் துறை, ஓய்வு விடுதிகளுடன் தொடர்புடைய தொழிற்துறை ஆகியவற்றை ஜீவனோபாய தொழிலாக கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டிற்குள் வாழ்கின்றனர். எவ்வாறெனினும் கலாசார நிறுவனங்கள் மற்றும் இடங்களை துறைசார் விசேட நிபுணத்துவம் கொண்ட குழு முழுமையாக ஆராய்ந்து அனுமதி வழங்கிய பின்னரே திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் இங்கு தெரிவித்தார். இலங்கையின் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமை சுற்றுலா துறைக்கென தேசிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிதி உதவி அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இங்கு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தற்போதய இன்னலுக்கு மத்தியில் பிள்ளைகளின் மனதை பாதித்துள்ள பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு யுனிசெப் அமைப்பு சிறுவர்களை இணைத்துக்கொண்டு ஏற்பாடு செய்த விசேட நிகழ்ச்சிக்கு இணைவாக இலங்கை சார்பில் பிள்ளைகளுக்கு மிக நெருங்கிய அரச தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 18 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் தமது பிரச்சினைகளை 10 வினாடிகளுனக்கு உட்படும் வீடியோவாக பதிவு செய்து
பிரதமருக்கு அனுப்பிவைக்க முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் முகவரிக்கு அதனை அனுப்பிவைக்க முடியும். அந்த கேள்விகளுக்கு பிரதமர் வழங்கும் பதில் பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றப்படும். இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் இவ்வாறான பிரச்சினைகளை வீடியோ ஊடாக பிரதமருக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.