கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 334ஆக உயர்வு..
இலங்கையில், பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 11 பேர் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட, பேருவளை பகுதியை சேர்ந்தவர்களென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொலனறுவை – புலஸ்திகம பகுதியை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவரும், ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்த ஜாஎல சுதுவெல்ல பகுதியை சேர்ந்த ஒருவரும் , கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 105 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 218 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/04/11-1.jpg”]