பொது போக்கவரத்து சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சரியான முறைக்கமைய சேவையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் 5 ஆயிரத்து 700 பஸ் வண்டிகள் நாளை முதல் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கின்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்படவுள்ள நிலையில், பஸ்வண்டிகளை சேவையில் ஈடுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இரு முறைகளின் கீழ் தனியார் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்த்தனவினால் அது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ஒரு முறையிலான பஸ்சேவையும் ஆபத்த குறைந்த பகுதிகளில் மற்றுமொரு முறையிலான பஸ்சேவைகளும் முன்னெடுக்கப்படும்.
பஸ் வண்டிகளில் பயணிக்கும் நபர்கள் முககவசம் அணிய வேண்டியது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். பஸ் வண்டிகளின் ஊழியர்களும் முககவசம் அணியவேண்டியது கட்டாயம் என அவர் குறிப்பிட்டார். பஸ் வேண்டிகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்ற முடியுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்த்தன தெரிவித்தார். பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பொதுபோக்குவரத்து சேவைகளை மக்களுக்கென நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.