மன்னார் – இழுப்பகடவாய் பிரதேசத்தில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் கேரள கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர் இழுப்பகடவாய் பகுதியை சேர்ந்த 35 வயதான நபரென தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் தொடர்பான அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் இழுப்பகடவாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.