பயணிகள் விமான போக்குவரத்து சேவையை இடைநிறுத்துவதற்கான காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான சேவைகள் அனைத்தும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டு, பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.