குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவு இன்று காலை 8.00 மணிமுதல் மீள திறக்கப்பட்டுள்ளதாக வைத்திசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்ங்கமுவ தெரிவித்தார். நேற்று பிற்பகல் வேளையில் தற்காலிகமாக திடிர் விபத்து பிரிவு மூடப்பட்டதாகவும் குறித்த பிரிவிற்கு வந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்ட நிலையில் குறித்த பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். குறித்த நோயாளி நெஞ்சு வலி என குறிப்பிட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந் நிலையில் குறித்த பிரிவில் பணி புரிந்த 39 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய தினம் புதிய சேவையாளர்களை இணைத்துக்கொண்டு வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவு மீள ஆரம்பிக்கபட்டுள்ளதாக வைத்திசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்ங்கமுவ தெரிவித்துள்ளார்.