புதிய கொரோனா வைரஸூக்கு என தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி முதல் முறையாக ஆபிரிக்காவில் பரிசோதிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் வைத்தியர்கள் தெரிவித்த கருத்து பிரிவினைவாத செயலென உலக சுகாதார அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எதெனம் கெப்ரியஸ் எத்தியோப்பிய நாட்டவராவார். அவர் பிரான்ஸ் வைத்தியர்களின் கருத்தை கண்டித்துள்ளார். எந்தவொரு தடுப்பூசியையும் பரிசோதிக்க ஆபிரிக்க பூமியை பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொவிட் 19 வைரஸ் பரவலை குறைப்பதற்கு சவுதி அரேபியா தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல நகரங்களில் 24 மணிநேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.