எதியோப்பியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சர் லியா டெடீஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் முதலாவது மரணம் அறிவிக்கபட்டு ஒரு மணித்தியாளத்தில் 2 ஆவது மரணமும் பதிவாகியுள்ளது. எதியோப்பியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்ற உறுதிசெயய்ப்ட்டுள்ளது.
இதேவேளை தெற்கு சூடானிலும் கொரோனா நோயாளி ஒருவர் இணங்காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பிரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய 29 வயதான பெண் ஒருவரே தெற்கு சூடானில் கொரோனா தொற்றாலராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.