கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு சட்டத்தை மீறியமை மற்றும் ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரத்தை துஷ்பிரயோப்படுத்தியமை போன்ற காரணங்களுக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 9 ஆயிரத்திற்கும் அதிமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.