உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் அரைவாசிக்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 59 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் மாத்திரம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 89 ஆயிரத்து 618 ஐ தாண்டியுள்ளது. அங்கு 3 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.