நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்களால் தவக்காலத்தின் இறுதிவாரத்தில் அனுஸ்டிக்கப்படும் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் விசேட ஆராதனைகள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் வணக்கத்துக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அனைவரும் மக்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடகைளை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.