வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிவிவகார அமைச்சில் தம்மை பதிவு செய்துள்ளனர். contact sri lanka திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 6 ஆயிரத்து 773 பேர் தம்மை பதிவு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 892 பேரும் தம்மை பதிவு செய்துகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மீண்டும் தயாகத்திற்கு வருவது தொடர்பில் 700 இற்கும் அதிகமானோர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் இருக்கும் இடங்களிலிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கற்றல் நடவடிக்கைகளுக்கென வெளிநாடு சென்றுள்ள இலங்கை மாணவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான தூதரகங்கள் ஊடாக அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.