ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு தேவையான அனுமதியை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர் ச்சந்தன விக்ரம ரத்னவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார். ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என பிரதமர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை பாவனையளார்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முறையாகவும், தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மரக்கறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், உற்பத்தி நிலையங்களிலிருந்து வர்த்தக நிலையங்களுக்கு அசௌகரியமின்றி கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட சகல பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான அனுமதியை வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் ஆலோசணை வழங்கியுள்ளார். உணவு பொருட்களை எடுத்து செல்லும்போது அசௌகரியங்கள் மற்றும் தடை ஏற்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை கருத்திற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பில் இலகுவாக எண்ண வேண்டானெ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் உயிர்கொல்லி தொற்று நோயாக கொரோனா வைரஸ் பரவி வருவதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரியுள்ளார்.