சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென விசேட நிவாரண வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள செடிகளுக்கென புதிய தேயிலை கன்றுகளை வழங்கவும், எதிர்காலத்தில் நிவாரண கடன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அமைச்சரவை கூட்டத்திலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அவர்கள் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடன் தொகைக்கான தவணைக் கட்டணத்தை 6 மாதத்திற்கு பின்னர் செலுத்துவற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது. லீசிங் உள்ளிட்ட கட்டணங்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச வங்கிகளின் ஊடாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு கடன் வழங்குவதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடன் மற்றும் வட்டி 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை. எதிர்காலத்தில் தேவைக்கேற்க மேலும் பல நிவாரணங்கள் வழங்கப்படுமென அவர் தெரிவித்தார். வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏனைய துறை சார்ந்தவர்களுக்கும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் குறி;ப்பிட்டார்.