ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு நாட்டு மக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதே ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டதன் நோக்கமாகும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணியின் அனுமதிபெற்ற வாகனங்கள் மாத்திரமே உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காகன அனுமதிக்கப்படும். ஏனைய வாகனங்கள் பொலிசாரின் அனுமதியின்றி பயணிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.