பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வெட் வரி செலுத்துவதற்கு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை கால அவகாசத்தை வழங்க தேசிய வருமான வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. பெப்ரவரி மாதத்திற்கான வெட்வரி மார்ச் மாதம் 20 ம் திகதி செலுத்த வேண்டும் மார்ச் மாதத்திற்கான வெட்வரி ஏப்ரல் மாதம் 20 ம் திகதி செலுத்த வேண்டும். எனினும் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை வெட்வரியை செலுத்துவதற்கான கால எல்லையை நீடிக்க தேசிய வருமான வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய ஏப்ரல் மாதம் 30 ம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் கட்டணம் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் செலுத்தப்பட்டதாக கருதப்படுமெனவும் தாமதமடையும் வரி செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெட்வரி அறிக்கையை ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.