ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென கனடா அறிவித்துள்ளது. எதி;வரும் காலங்களில் இடம்பெறும் எந்தவொரு போட்டித் தொடரிலும் தமது நாட்டு விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இதற்கு காரணமாகும். வைரஸ் தொற்று அழிக்கப்பட்டு சர்வதேசம் வழமைக்கு திரும்பியதன் பின்னர் போட்டித் தொடர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென கனடா அறிவித்துள்ளது.
இதேவேளை விளையாட்டு துறையினரின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் 2020 ஒலிம்பிக் தொடரை பிற்போடுவது தொடர்பில் ஜப்பான் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவையும் எட்டவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.