வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் சிலர் தம்மை இதுவரை பொலிசில் பதிவு செய்யவில்லையென இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுமென்ற நோக்கில் அவர்கள் தம்மை பதிவுசெய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போதய சூழ்நிலையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதெனவும் வைரசை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.