கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு
படிக்க 0 நிமிடங்கள்