ஹட்டன் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பகமுவ மற்றும் நுவரெலியா மாவட்ட நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அண்மையகாலப்பகுதிகளில் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைதந்துள்ள 76 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பஸ்கள் வேன்கள் என்பன அட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொவிட் – 19 பரவக்கூடிய பகுதியாக நுவரெலியா மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வைரஸால் எவராவது பீடிக்கப்பட்டால் அவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.