நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெகிந்தர பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்து இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.