எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அதற்கமையவே அமெரிக்க மற்றும் கனடா தலைவர்களுக்கிடையில் எல்லை பகுதிகளை மூடுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.