குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை காலமும்அது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது வருகை தந்துள்ள வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அனைத்துவகையிலான வீசாக்களும் ஏப்ரல் 12 அம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்து விசாவையும் நீடித்துக் கொள்ளலாம்.