உணவு மற்றும் மருந்து விற்பனை நிலையங்களை தவிர ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு கட்டார் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். இந்நிலையில் 50 க்கும் அதிமானோரின் பங்கேற்புடன் இடம்பெறும் ஒன்றுகூடல்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.
கனடாவிலும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமது நாட்டிற்குள் இருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்துகொள்ளவேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் தெரிவித்துள்ளார்.