ஜோர்தானில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜோர்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக சந்தைகள் உட்பட பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்கள் பல அந்நாட்டில் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜோர்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை அந்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எந்தவொரு நபரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.