இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இவர்களுள் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது