ஈரானின் தெற்கு பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பகுதியான பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஈரான் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 2017 ஆம் ஆண்டு ஈராக் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.