ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். வீடுகளில் இருப்பதை கூடியளவில் பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிந்தளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் கைகால்களை கழுவுவதை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் தீவிரமடைந்துள்ளதால் இன்றைய தினம் அரச பொது வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.