கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவ அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு முகாம்களில் இந்த நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.