கொரோனா வைரஸ் தொற்று பிராந்திய நாடுகளிடையே பரவுவதை தடுக்கும் நோக்கில் பிராந்திய நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ஷ இன்று மாலை 5.00 மணிக்கு செய்மதி தொலைபேசி வசதிகள் ஊடாக கலந்துரையாடினார். கொவிட் -19 என்ற ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சார்க் அமைப்பு நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடியாக இந்த உரையாடலில் தொடர்புகொண்டு இந்த பிராந்தியத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடியதாக என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.